Monday, December 8, 2014

குழந்தை வளர்ப்பு | சிறப்பு பதிவு

குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி “குழந்தையின் எடை என்ன?” இது பிறந்திருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை அறிந்துக்கொள்ள இப்படி கேட்கிறோம்

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை எல்லா மாதமும் குழந்தையை மருத்துவ நிபுணரிடம் காட்டி எடை, உயரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.



தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. சாப்பிட வைப்பதே பெரும்பாடாக தான் இருக்கும். அப்போதுதான் நாம் நம் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும். குழந்தையின் வளர்ச்சியில் உயரமும், எடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த வயதுக்கு இருக்கவேண்டிய உயரத்துக்குரிய எடை நம் குழந்தை அடைந்திருக்கிறதா என்று ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும். அதிக எடையோ, அல்லது குறைவான எடையோ இருந்தால் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

அதிக எடை:

அதிக எடை ஏற்படும் பொழுது குழந்தைகள் சர்க்கரை வியாதிக்குள்ளாகிறார்கள் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. அதீத உணவு, துரித உணவு, குறைவான உடற்பயிற்சி இவைதான் குண்டு குழந்தைகளுக்கான காரணங்கள். இதனை சரி செய்து சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து சரியான எடைக்கு கொண்டு வந்துவிடலாம்.

குறைவான எடை:

இந்தவகை குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. உடலில் தெம்பில்லாது போவதால் சோம்பலாக இருப்பார்கள். அதிகம் ஓடியாடி விளையாட முடியாது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாததால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இது இவர்களின் வளர்ச்சி, கற்றல் போன்றவற்றில் பாதிப்பைத் தரும். அதிக உயரத்துக்கு தகுந்த உடல் எடை இல்லாமல் போனால் இந்தக் குழந்தையும் எடைக்குறைந்த குழந்தையின் பாதிப்புக்களுக்கு உள்ளாவான். நாம் குழந்தையின் உயரம் மற்றும் எடையைக் கண்காணித்து வரவேண்டும்.

உயரம்/எடை அளவு ஆண் குழந்தைக்கு வேறு அளவு, பெண் குழந்தைக்கு வேறு அளவு என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியாக கவனித்து முறையாக வளர நாம்தான் உதவ வேண்டும். ஆரோக்கியாமான குழந்தைகளை வளர்ப்போம். அவர் நலன் காப்போம்

தொகுப்பு: பாபு நடேசன்

No comments:

Post a Comment