Friday, November 13, 2015

குழந்தை வளர்ப்பும் பழக்கவழக்கமும் | பாபு நடேசன்

அனைவருக்கும் வணக்கம் 

இந்த பகுதி குழந்தை வளர்ப்பு பற்றி பொதுவான கருத்தை பதிவு செய்வதாகும் | ஏதேனும் குறைகள் இருப்பின் பின்னூட்டத்தில்  தெரிவிக்கவும் 

குழந்தைப் பருவத்தில் அவர்களை வளர்க்கும் விதம்தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது, குழந்தைகள் சிலவற்றை பார்த்து கற்றுக்கொள்ளும் சிலவற்றை அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் பொது இடங்களில், உறவினர்கள் வீட்டில் , தொலைகாட்சிகளில் சில நல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறது. பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டும். 

இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கமுடியும். குழந்தைகளை பயப்படும்படி செய்ய வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருங்கள் அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். கண்டிப்பாக மாறிவிடுவார்கள்.


குழந்தைகளை அதிகம் தொலைகாட்சி பார்க்க அனுமதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளும். எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை தொலைகாட்சி பார்க்க வைப்பதை விட, சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழுங்கள். மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள்.



குழந்தைகளுக்கு ஒரு சில விசயங்களை சொல்லிக் கொண்டேயிருங்கள் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்ல வேண்டும், பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து மட்டும் தான் செல்லவேண்டும், ஏன் சீருடை அணிகிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டை கூறுங்கள், பள்ளியின் வீட்டுப் பாடத்தை ஒரு குறிப்பிட்ட நேரப்படி முடிக்க கற்றுக்கொடுங்கள்.


 












தப்பு செய்வது மனித இயல்பு; தப்பு செய்யும் போது அன்புடன் கண்டியுங்கள், போக போக அவர்களை மாற்றம் பெறுவார்கள், பயம் கொள்ள வேண்டாம்.  
 
குழந்தைகளுக்கு படுக்கைக்கு செல்லும்போது கதைகளை சொலுங்கள், சொல்லப்படும் கதைகளில் அறிவு, வீரம், நீதி, தைரியமிக்க கருத்துக்கள் கதைகளை சொல்லுங்கள். இதனால் குழந்தைகளின் கற்பனை திறம் அதிகரிக்கும். நுண்ணறிவு திறனும் வளரும்.


நல்ல அறிவுள்ள தமிழ் கதைககளை படிக்க இங்கே செல்லுங்கள் [தமிழ் அறிவு கதைகள் [{http://tamilarivukadhaikal.blogspot.in}]
இன்னும் நிறைய இருக்கிறது, அடுத்த வாரம் சிந்திப்போம் 
தொகுப்பு:-
பாபு நடேசன்


Wednesday, January 7, 2015

புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள் | குழந்தை வளர்ப்பு

நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் சில தவறுகள் செய்து விடுவது உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது சதாரணமான விஷயம் அல்ல. குழந்தை பிறந்தது முதல் நமது கவனம் முழுக்க அவர்கள் மீதே இருக்க வேண்டும். அதுவும் அவர்கள் தவள ஆரம்பித்து விட்டால் நமது வேலை கண்டிப்பாக அதிகம் தான்.

புதிய தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க சில அறிவுரைகள்



கணவர் வீட்டில் இருக்கும் போது எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளுங்கள் அதன் பின் முழு நேரமும் ஒரு வினாடி கூட‌ அசராமல் குழந்தையை கண்காணிப்பதற்கே முழு நேரமும் எடுத்து கொள்ளூங்கள்..

குழந்தை தவளும் நிலையில் குழந்தையை கட்டிலில் தூங்க போடுவது மிக தவறு. கீழே படுக்கை விரித்து தூங்க வைப்பது சிறந்தது.

குழந்தை தவள‌ ஆரம்பித்து விட்டால் வீட்டை சுத்தமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளூங்கள்..

எதாவது ஒரு பொருளை கீழே போடும் முன் அதை நம் குழந்தை வாயில் போட்டுவிடும் என்பதை மனதில்வைத்து குப்பையில் போடுங்கள்

அவர்களூக்கு கை எட்டும் அளவில் சுவிட்ச் பாக்ஸ் ஹோல்டர் இருந்தால் அதை கருப்பு நிற‌ இன்சுலேசன் டேப் போட்டு அடைத்துவிடுங்கள்..

ஆபத்தான‌ பொருட்கள் (பெட்ரோல்,, வேதியல் பொருட்கள்..மருந்து) இருந்தால் அதை குழந்தைக்கு தெரியாமல் பார்துகொள்ளூங்கள்..

முக்கியமாக‌ தோடு தோட்டின் திருகாணி மோதிரம் எதையும் மறந்து வைத்து விட்டால் அல்லது படுக்கையில் விழுந்து விட்டால் அதை உடனே எடுத்து விடுங்கள் அதை எளிதில் வாயில் போட்டு கொள்ளுவார்கள்..

பால்கணியில் துனி காயவைபவர்கள் குழந்தையின் முன் வெளியே செல்லாமல் அவர்கள் தூங்கும் போதோ இல்லை யாராவது வீட்டில் இருக்கும் போது செய்யுங்கள்..

குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவணமாக‌ கொடுக்கனும்.. தேன் போன்ற‌ திக்கான‌ சிரப்புகள் இருந்தால் அதை கொஞ்சம் சுடுதண்ணீயில் கலந்து கொடுக்கவும்.. குழந்தை அழுகும் போது இப்படி திக்கான‌ மருந்து கொடுத்தால் தொண்டையில் கட்டி விடும் பிறகு குழந்தை மூச்சுவிடாமல் தடுமாறும்

குழந்தைங்க இருக்குற வீட்டுல தாழ்ப்பாள் போடும் மற்றொரு கதவின் ஓட்டைகளை காகிதங்களை அல்லது மர கட்டைகளை கொண்டு பகல் நேரங்களில் அடைத்து விடுங்கள்.

இது குழந்தைகள் தாழ் போடுவதை தடுக்கும். சற்று கவனிக்காமல் போனாள் அவர்கள் தாழ் போட்டு கொள்வார்கள் அல்லது உங்களை தாழ் போட்டு விடுவார்கள்.

கதவுகளில் கூர்மையான பகுதிகளை எதாவது கொண்டு மறைக்கவும். வீட்டின் தரையில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்து துடைத்து விடவும்

தொகுப்பு: குழந்தை வளர்ப்பு-Child Care | பாபு நடேசன்