Friday, November 13, 2015

குழந்தை வளர்ப்பும் பழக்கவழக்கமும் | பாபு நடேசன்

அனைவருக்கும் வணக்கம் 

இந்த பகுதி குழந்தை வளர்ப்பு பற்றி பொதுவான கருத்தை பதிவு செய்வதாகும் | ஏதேனும் குறைகள் இருப்பின் பின்னூட்டத்தில்  தெரிவிக்கவும் 

குழந்தைப் பருவத்தில் அவர்களை வளர்க்கும் விதம்தான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது, குழந்தைகள் சிலவற்றை பார்த்து கற்றுக்கொள்ளும் சிலவற்றை அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் பொது இடங்களில், உறவினர்கள் வீட்டில் , தொலைகாட்சிகளில் சில நல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறது. பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டும். 

இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கமுடியும். குழந்தைகளை பயப்படும்படி செய்ய வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருங்கள் அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். கண்டிப்பாக மாறிவிடுவார்கள்.


குழந்தைகளை அதிகம் தொலைகாட்சி பார்க்க அனுமதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் கலந்து பேசி, விளையாடி மகிழும் குழந்தை, அதிக வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளும். எனவே, எப்போதும் சிறு குழந்தைகளை தொலைகாட்சி பார்க்க வைப்பதை விட, சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி மகிழுங்கள். மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள்.



குழந்தைகளுக்கு ஒரு சில விசயங்களை சொல்லிக் கொண்டேயிருங்கள் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்ல வேண்டும், பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து மட்டும் தான் செல்லவேண்டும், ஏன் சீருடை அணிகிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டை கூறுங்கள், பள்ளியின் வீட்டுப் பாடத்தை ஒரு குறிப்பிட்ட நேரப்படி முடிக்க கற்றுக்கொடுங்கள்.


 












தப்பு செய்வது மனித இயல்பு; தப்பு செய்யும் போது அன்புடன் கண்டியுங்கள், போக போக அவர்களை மாற்றம் பெறுவார்கள், பயம் கொள்ள வேண்டாம்.  
 
குழந்தைகளுக்கு படுக்கைக்கு செல்லும்போது கதைகளை சொலுங்கள், சொல்லப்படும் கதைகளில் அறிவு, வீரம், நீதி, தைரியமிக்க கருத்துக்கள் கதைகளை சொல்லுங்கள். இதனால் குழந்தைகளின் கற்பனை திறம் அதிகரிக்கும். நுண்ணறிவு திறனும் வளரும்.


நல்ல அறிவுள்ள தமிழ் கதைககளை படிக்க இங்கே செல்லுங்கள் [தமிழ் அறிவு கதைகள் [{http://tamilarivukadhaikal.blogspot.in}]
இன்னும் நிறைய இருக்கிறது, அடுத்த வாரம் சிந்திப்போம் 
தொகுப்பு:-
பாபு நடேசன்