Tuesday, July 24, 2012

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)


குழந்தைக்கு எதை செய்துக் கொடுத்தாலும் அதனுடன் பொருமையையும் தங்களின் விலைமதிப்பில்லாத தாயன்பையும் சேர்த்து கொடுங்கள்.

குழந்தையை வளர்க்கும் தாய்,  சமூக பிரச்சினையையோ, குடும்ப பிரச்சினையையோ பற்றி கவலை படகூடாது. நீங்கள் உண்டு உங்கள் குழந்தை உண்டு என இருக்க பழகுங்கள். உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

கேழ்வரகு கஞ்சி (குழந்தைகளுக்கு)

பரிமாறும் அளவு : 2

  • கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கேழ்வரகினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகினை ஊற்றி கிளறவும்.
  • சுமார் 5 - 8 நிமிடம் வேகவிடவும். இடையிடையே நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் சர்க்கரை (தேவைப்பட்டால்) சேர்த்து கலந்து கொடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

குறிப்பு : உடலிற்கு மிகவும் நல்லது. 

No comments:

Post a Comment